<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d7374703590537237587\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://tamizhmarumalarchi.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://tamizhmarumalarchi.blogspot.com/\x26vt\x3d3097823104206445569', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

PRESS RELEASE[16.08.2011]::மூவர் உயிர் காக்க சென்னையில் நாளை(17.08.2011) ஆர்ப்பாட்டம் - த.தே.பொ.க.

Tuesday 16 August, 2011

மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே

பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை

தமிழக அரசு ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டும்!

 

சென்னையில் நாளை(17.08.2011) ஆர்ப்பாட்டம்

 


இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.   

 

மோசடியாக துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களையே ஒரே சாட்சியமாக்க் கொண்டு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், தமிழக ஆளுநருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்கும் அதிகாரத்தின் மூலம் இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

 

நாளை(17.08.2011) மாலை 5 மணியாளவில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடைபெறுகின்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் திரு. தங்கர் பச்சான், திரு புகழேந்தி தங்கராஜ், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் புலவர் அரணமுறுவல், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்ட பல்வேறு தமிழன ஆதரவாளர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.

 

இவ்வார்ப்பாட்டத்தில், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் தமிழ்த் தேசியர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்  கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

 

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவு

மூவர் மரண தண்டனையை ரத்து செய்க! - ஓசூரில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

Saturday 13 August, 2011

மூவர் மரண தண்டனையை இரத்து செய்க
ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்

ஓசூர், 13.08.2011.
 
இராசீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அநியாயமாக சிறையிலருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தமிழக அரசு, ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஓசூரில் இன்று(13.08.2011) ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்திருந்த காவல்துறையினர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பின் அனுமதியளித்தனர். இதையடுத்து ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் நடவரசன் தலைமை தாங்கினார். தமிழக இளைளுனர் ஒருங்கிணைப்பு இயக்க தோழர் பிரசாத், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செந்தமிழ், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக விசுவநாதன் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
 
நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து பேசினார். அவர் பேசும் பொது, இராசீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள இன்றும் பல விடயங்கள் மர்மமாக, விசாரக்கப்படாத நிலையில் இருக்கும் போது இப்படி அவசர அவசரமாக மரண தண்டனைக்கு உத்தரவிடுவது சரியல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். ஆர்ப்பாட்டாத்தில், பொது மக்களையும், தமிழின உணர்வாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
 
செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

மூவர் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் - தமிழகமெங்கும் த.தே.பொ.க. போராட்டம்!

மூன்று தமிழர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே
மூவரின் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும்
சென்னையில் 17.08.2011 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
 
சென்னை, 17.08.2011.
 
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும அப்பாவித் தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார். 

இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. காவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட ஒப்பதல் வாக்குமூலம் வழக்கமான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் செல்லாது. தடாச் சட்டம் பொருந்தாது என்றபின், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைத் தான் உச்சநீதிமன்றம் பின்பற்றியிருக்க வேண்டும்.   

இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி அதற்காகத் தண்டனையும் பெற்றவராவார்.

இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியவர். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.

இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில ஆளுநரிடம் எழுத்தாளர் மகா சுவேதா தேவி முறையிட்டார். ஆந்திர மாநில ஆளுநரிடம் கருணை மனு நிலுவையில் உள்ளது என்பதைக் காரணம் காட்டி, ஆளுநரின் முடிவு வரும் வரையில் மேற்படி இளைஞர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடையாணையும் வாங்கினார். 

1950களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலனின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின், கேரளத்தில் ஈ.எம்.எஸ். அரசு ஆளுநர் மூலம் அவரது மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது.

எனவே, இந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி, தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
 
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
 
ஓசூர்
ஓசூரில் த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் இன்று(13.08.2011) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.
 
மதுரை
இன்று(12.08.2011) மாலை த.தே.பொ.க. தோழமை அமைப்பான மக்கள் உரிமைப் பேரவை சார்பில் 5 மணிக்கு மீனாட்சி பசார் அருகில், தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மக்கள் உரிமைப் பேரவை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ச.அருணாச்சலம் தலைமையில் இதே கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். இதில், நாம் தமிழர், த.தே.வி.இ., உள்ளிட்ட  பல்வேறு தமிழ் அமைப்புகளும் பங்கேற்கின்றன.
 
தஞ்சை
தஞ்சையில், 16.08.2011 செவ்வாய் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் இராசு. முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னனணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
 
சென்னை
17.08.2011 அன்று மாலை 5 மணிக்கு சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மையார் உட்பட பல தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
 
சிதம்பரம்
சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகில், 16.08.2011 அன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் விளக்கவுரையாற்றுகிறார்.
 
கோவை
கோவையில் த.தே.பொ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மாநகரக் காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார். இது தொடர்பாக த.தே.பொ.க. நிர்வாகிகள் மாநகரக் காவல்துறையிடம் மீண்டும் முறையீடு செய்துள்ளது. விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடம், நாள் அறிவிக்கப்படும். 
 
இந்த ஆர்ப்பாட்டங்களில், திரளான தமிழர்களும், மனித  நேயர்களும் கலந்து கொண்டு இக்கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
 
 

PRESS NEWS[12.08.2011] மூவர் மரண தண்டனையை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் - பெ.மணியரசன் அறிக்கை!

Friday 12 August, 2011

மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே

பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை இரத்து செய்க!

தமிழக அரசு ஆளுநர் மூலம் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
 
சென்னை, 12.08.2011 

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களின் கருணை மனுவை நடுவண் உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்யலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்பியவுடனேயே, அவசர அவசரமாக கருணை மனுவை தள்ளுபடி செய்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்.

 

இராசீவ் கொலை வழக்கிற்கு தடாச் சட்டம் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இது மிகப்பெரும் முரண்பாடாகும்.

 

இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய காவல்துறை அதிகாரி தியாகராசன் என்பவர், ஏற்கெனவே கேரளா எர்ணாக்குளத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அருட்சகோதரி அபயா என்பவரது கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சித்து அதற்காக தண்டனையும் பெற்றவராவார்.

 

இவர் தான் பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களைத் துன்புறுத்தி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அதனை நீதிமன்றத்தில் சாட்சியமாகத் தாக்கல் செய்தார். துன்புறுத்திப் பெறப்பட்ட இவ்வொப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கருதி  உச்சநீதிமன்றம் இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்தது அநீதியாகும்.

 

இவ்வாறு நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட இத்தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 72 குடியரசுத் தலைவருக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. பிரிவு எண் 161 மாநில ஆளுநர்களுக்கு இதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது.

 

அண்மையில் ஆந்திராவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 தலித் இளைஞர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து விட்ட பிறகும், மாநில அரசிடம் எழுத்தாளர் சுவேதாதேவி முறையிட்தன் பேரில், மாநில ஆளுநர் தலையிட்டு அவர்களை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி யிருக்கின்றனர்.

 

 

1960களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் சி.ஏ.பாலன் என்பவருக்கு குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்துவிட்டப் பிறகும், கேரள அரசு தமது ஆளுநரின் மூலம் அவரது தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்திருக்கிறது.

 

எனவே, இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், பேரறிவாள், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களைப் பெற்று, தமிழக ஆளுநர் மூலம் அவர்களது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரத்தை இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்குகின்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

 

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையில் 17.08.2011 அன்று சைதை பனகல் மாளிகை முன்பு த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. உணர்வாளர்களும், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் இவ்வார்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி

 

PRESS RELEASE[02.08.2011]:: பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்! - பெ.மணியரசன்

Tuesday 2 August, 2011


பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்! 


ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்தியா நடத்தி வருகின்றது. 2009 மே மாதம் குவியல் குவியலாக ஈழத்தமிழ் பொது மக்களை கொன்றழித்த இராசபக்சேயை திரும்பத் திரும்ப தில்லிக்கு அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து, சிறப்பித்து வருகிறது இந்தியா.

 

இப்பொழுது, இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவரையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அழைத்து சிறப்பித்திருக்கிறது.

 

01.08.2011 அன்று மக்களவையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இலங்கை நாடாளுமன்றக் குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., தமிழக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கண்டனக் குரல் எழுப்பினார்கள். அதனை மக்களைவைத் தலைவர் திருமதி.  மீரா குமாரி கண்டித்துள்ளார். அத்துடன் இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீராகுமாரி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

 

தமிழினத்தை அழித்த சிங்கள இனவெறி நாட்டின் நாடாளுமன்றக் குழுவை சிறப்பு விருந்தினர்களாக மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் அழைத்ததற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், மக்களவைத் தலைவர் மீராக் குமாரியும் தமிழக மக்களிடம் தான் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

 

தமிழினத்தை அழித்தது போல, ஏதாவது ஒரு வெளிநாட்டில் இந்திக்காரர்களையோ, மலையாளிகளையோ அல்லது மற்ற இனத்தவரையோ, ஓர் அரசு அழித்திருந்தால் அந்த அரசின் பிரதிநிதிகளை மக்களவைக்கு அழைத்து கௌரவிப்பார்களா?

 

சிங்கள இனவெறி அரசு தமிழினத்தை பகை இனமாகக் கருதுவதைப் போலவே இந்திய அரசும் தமிழினத்தை பகையினமாகக் கருதுகின்றது என்பது மேலும் மேலும் உறுதியாகின்றது.

 

இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போருக்கு ஆயுத உதவி, நிதி உதவி, அரசியல் உதவி என அனைத்து உதவிகளையும் செய்து அப்போரில் பங்கு கொண்ட இந்தியா, தமிழினத்தை அழித்த தனது சகோதரர்களான சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து இந்திய அரசு பாராட்டுகிறது. இச்செயல் தமிழர்களை தனது சகோதரர்களாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

 

2009 இன அழிப்புப் போரில் இலங்கை அரசு அப்பாவி தமிழ் பொதுமக்களைக் கொன்று போர் குற்றம் புரிந்ததை கண்டித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை அரசின் போர் குற்றங்களை கடுமையாக சாடி பேசினர். அந்நாட்டு பிரதமர் கேமரூன், இலங்கை அரசின் போர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார். அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கை அரசின் போர் குற்றங்களைக் கண்டிக்கும் வகையில் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது.

 

இவ்வாறு இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் செய்ததை உலகின் பலநாடுகள் கண்டிக்கும் இவ்வேளையில், இந்திய நாடாளுமன்றம் இலங்கை அரசுப் பிரதிநிதிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பாராட்டு செய்ததற்கு இந்தியப்ட பிரதமர் மன்மோகன் சிஙற் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

 

இலங்கை பிரதிநிதிகளைக் கண்டித்து தமிழக நாடா உறுப்பினர்கள் குரல் கொடுத்த போது, அதற்கு ஆதரவாக இதர மாநிலங்களின் உறுப்பினர்கள் ஒருவர் கூட குரல் எழுப்பாதது, இந்தியத் தேசியம் எங்கிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

தமிழர்கள் தங்கள் இனத்தை சூழ்ந்துள்ள பேராபத்தை முறியடிக்க ஈழத்தமிழ் இனத்தைக் காப்பாற்ற தாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இது தவிர இப்பொழுது இந்தியாவில் தமிழ் இனத் தற்காப்புக்கு வேறு வழியில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

தோழமையுடன், 

பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: சென்னை

நாள்: 02.08.2011

 

 

 

PRESS RELEASE[23.07.2011]:: “தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?” - கி.வெங்கட்ராமன் கேள்வி!

Saturday 23 July, 2011

"தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?"கி.வெங்கட்ராமன் கேள்வி

 

23.07.2011, சென்னை-17.


"தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் எரிவளி கிடைக்கும் போது, கச்சா எண்ணெய் உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், ஏசல், விலையேற்றம்?" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பினார்.

 

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(23.07.2011) சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், "தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்களம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

 

அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதை போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை(ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

 

இப்போது காவிரிப்படுகையை இந்திய அரசு தீருபாய் அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும் போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.



தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை - த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

Wednesday 20 July, 2011

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

 

சென்னை, 20.07.2011.


பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும்.

 

பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கத் தமிழக அரசுக்கு அனுமதியும் வெளிநாட்டுப் பணமும் இந்திய அரசு வழங்க வேண்டும்.

 

தமிழக அரசு இக்கோரிக்கைகளை இந்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும். பெட்ரோலியம் உற்பத்தியாகும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு அரபு நாடுகளில் இருப்பதைப் போல மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களை வழங்க வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு 23.07.2011 காரிக்(சனி)கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு த.தே..பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் த.அன்புவாணன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றுகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

::FONT PROBLEM::

Click here to
download Unicode EXE
Run this Exe for setting up UNICODE for your system.

Click here to
Download Bamini Font.
Copy the font file and paste it in the Fonts Folder of Control Panel

செய்தித் தலைப்புகள்


ஒரு குட்டி தேர்தல்


சற்றுமுன் நிகழ்ந்தவை..


தங்கள் கருத்துக்கள்

தமிழில் எழுத கீழே இங்கு தட்டச்சு செய்யவும் ! தாங்கள் எழுத விரும்பும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அப்படியே தட்டச்சு செய்யவும்...
எடுத்துக்காட்டு: 'அம்மா' என்று எழுத Ammaa என தட்டச்சு செய்யவும்
Phonetic
Tamil Typewritter

செய்தித் தொகுப்பு

தோழமைத் தளங்கள்

எம்மைப் பற்றி

மறுமலர்ச்சி லாபநோக்கமற்ற இணையதள மாத இதழ்.
Creative Commons License



This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 2.5 License

பார்வையாளர் எண்ணிக்கை
ஆசிரியர்:Unknown

தேடல்

வலைதளங்கள்
மறுமலர்ச்சி தளம்