இட ஒதுக்கீடு - ஒரு பார்வை
க.அருணபாரதி
(இங்கு நான் சொல்வதெல்லாம் மானுடவியலின் கூறுகள் அன்றி பிரிவினைவாதமல்ல.. இதில் சொல்லவிருக்கும் சில உண்மைகள் சிலருக்கு வருத்தமாக இருக்கலாம்.. அதற்காக வருந்துகிறேன்.. ஆனால் சொல்லாமலிருக்க முடியாது...)
இடஓதுக்கீடு பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொண்ட பிறகு தான் அதை எதிர்க்கவோ ஆதரிக்கவோ வேண்டும்... அது பற்றி எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.. வாதங்கள் வரவேற்கப்படும்..
இடஒதுக்கீடு பிரச்சனைக்கு ஆணிவேர் சாதி. முதலில் அதை பற்றி காண்போம்..
சாதி வகைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.. தமிழ் சாதி முறை, ஆரிய சாதி முறை...
ஆரியர்கள் எனப்படும் மக்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து வந்த மக்கள் கூட்டம். அவர்கள் ஈரான், ஈராக் பகுதி வழியாக, கைபர் போலன் கனவாய் வழியில் சிந்து நதிக்கரையோரம் இருந்த திராவிட நாகரிகத்தை அழித்துவிட்டு அங்கு தனது இருப்பை பதிவு செய்தனர். அவர்கள் வெள்ளையாக இருந்த காரணத்தால் இங்கிருந்த மக்கள் அவர்களை பெரிய கடவுளாக நினைத்து தன் அறியாமையால் வழிபட ஆரம்பித்துவிட்டனர்... பல திராவிட மன்னர்களுக்கு விருந்தாக பல ஆரிய பெண்கள் கொடுக்கப் பட்டனர்.. பெண்கள் மோகத்தில் வீழுந்த மன்னர்களை ஆட்டிப் படைக்க அவர்கள் முடீவு செய்தனர்.. அதன் வினைவாக அரசின் முக்கிய பதவியின் ஆலோசகனாக ஒரு சோதிடர் சேர்க்கப்பட்டார்..
நாள்-நட்சத்திரம்-திதி-யோகம்-நேரம் -- இந்த ஐந்தை தான் பஞ்சாங்கம் என்பர்.. இதனை பார்ப்பவன் தான் 'பார்ப்பான்' ஆனான்.. அது தான் பார்ப்பனர் பெயர் வரலாறு...
இப்படி அரசு சபையில் முதலில் இடம் பெற்ற பார்ப்பனர்கள் பிறகு பல யோசனைகளை கூறி மன்னர்களிடம் ஆரிய கலாச்சாரத்தை பரப்பினர்...
ஒரு மன்னன் பொரில் வெற்றி பெற்றதும், அதன் நினைவாக கோயில் கட்ட வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொன்னார்கள். அதில் பார்ப்பனர்கள் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டார்கள்..
கோ - மன்னன், இல்- வீடு ---> கோ + இல் -- கோயில்
இப்படி தான் கோயில் வந்தது... பார்ப்பனர்களின் வரவிற்கு முன்னர் இருந்த கோயில்கள் அழிக்கப்பட்டன.. பார்ப்பனர்கள் தமக்கு அடையாளமாக பூணூல் அணிந்தனர்.. வேதங்கள் இயற்றினர்...அந்த வேதங்கள் கடவுள் சொன்னது என்றும் மன்னர்களுக்கும், மன்னர் தான் கடவுள் என நம்பிக் கொண்டிருந்த மக்களிடமும் பரப்பினர்... அந்த வேதங்களில் உள்ள சில பகுதிகள்...
அத்வைதம்-அத், சுலோகம்-சுலோ
அத் 1 சுலோ31:-பிரம்மா,உலக வளர்ச்சியின் பொருட்டுத் தன்னுடைய முகம்,தோள்,தொடை,கால் ஆகியவ்ற்றினின்றும் பிராம்மணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன் ஆகியவர்களை முறையே உண்டு பண்ணினார்.
அத்1சுலொ100:- பிராமணன் முதற் பிறவி.அத்தகதியினால் பிராம்மணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்துச் செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ளத் தக்க உரிமை படைத்தவனாகிறான்.
அட்1சுலொ101:-பிராம்மணன் மற்ற மூவரிடமிருந்தும் பெறுகிற உணவு,உடை பொருள் மற்றெதுவானாலும்,அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் அம்மூவரும் பிராம்மணனின் உடைமையை வைத்துத்தான் வாழ்ந்து வருபவர்களாவார்கள்.
அத்2சுலோ31:-பிராம்மணனுக்கு மங்களம்,சத்ரியனுக்கு பலம்,வைசியனுக்கு செல்வம்,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களையே சூட்ட வேண்டும்.(அதனால்தான் சர்மன்,வர்மன்,பூபதி என்றும் தாசன்,கேசவன்,அமாவாசை பெயர்களும்).
அத்2சுலோ91:-மற்றவர்கட்கு உழைப்பதற்கென்றே சூத்திரன் படைக்கப்பட்டுள்ளான். மற்ற மூன்று வருணத்தார்க்கும் பொறாமையின்றிப் பணிவிடை செய்வதைச் சூத்திரனுக்கு முக்கிய அறமாகப் பிரம்மா ஏற்படுத்தியுள்ளார்.
அத்1சுலொ99:-பிராம்மணன் சாத்திர நூலைப் படிக்கலாம்; அவன் மற்ற வருணத்தார்க்குச் சொல்லித் தரக்கூடாது.
அத்8சுலோ270:-பிராம்மணர்களின் பெயர் கூறி இகழ்ச்சியாய்த் திட்டுகிற சூத்திரன் வாயில் பத்தங்குல நீலமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க.
அத்8சுலோ279:-பிராம்மணனைச் சூத்திரன் கையாலேனும் கருவியாலேனும் தாக்கினால் எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்பை அறுத்திடுக.
அத்9சுலோ265:-பிராம்மணன் மீது காறியுமிழ்பவனின் உதடுகளை அறுத்திடுக; மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு; மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்துவிடு.
அத்8சுலோ380:-பிராம்மணன் எப்பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல்,காயமின்றி,அவன் பொறுளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது.
அத்8சுலோ381:-பிரம்மஹத்தியை விட(பார்ப்பானைக் கொல்வது)அதிகமான பாவம் உலகத்திற் கிடையாது.ஆதலால் பிராமம்மணனைக் கொல்ல வேண்டும் என்று அரசன் மனத்தினாலும் நினைக்கக் கூடாது.ஆனால் சூத்திரன் நிலை என்ன?
அத்9 சுலோ248:-பிராம்மணனுடைய பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்புறுத்துகின்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக.
இதெல்லாம் கதைகள் என்று பல மன்னர்களும் மடையர்களும் சொல்வார்கள். அதனால் தான் சோழ மன்னர்கள் பல மங்கலங்கள்(நல்ல நஞ்சை நில கிராமங்கள்). சதுர்வேதி மங்கலங்கள்,பார்ப்பனர்களுக்காகவே கல்வி மானியங்கள் நன்கொடை செய்தனர்.
இதெல்லாம் வெறும் பேச்சு என்று சொல்லும் வீணர்களுக்காகத்தான் வடமொழி அறிந்த சுந்தரனார் சொன்னார்"வள்ளுவர்செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி".
பாரதியார் சொல்கிறார்,"சூத்திரனுக்கொரு நீதி தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,சாத்திரம் சொல்லிடு மாயின்அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்".
இது இன்று இல்லை என்று சொல்லும் அறிவுக் கொளுந்துகளே, உங்களுக்காகவேத்தான் உச்ச நீதி மன்றம் காஞ்சி சுப்பிரமணிக்குத் தனிநீதித் தர அனைத்து விதத்திலும் கடுமையாக உழைக்கிறது.
பெண்ணடிமை பற்றி நீங்களே படியுங்கள். பார்ப்பனர்களின் ஏமாற்றிற்கும் சில தமிழர்கள் என்ற படித்தாகச் சொல்லிக் கொள்ளும் அறிவில்லா ஜீவிகளுக்கும் சேர்ந்துதான் மனுநீதியை பாபா சாகேப் அம்பேத்கர் கொளுத்தினார். திருவள்ளுவர் முதல் பெரியார் வரை திட்டித் தீர்த்தார்கள். ஆம் இன்று நீங்கள் பொட்டுக் கட்டி வாழ நினைத்தாலும் உங்களுக்கும், உங்கள் பெண்களுக்கும் சேர்த்துத்தான் பெண்ணுரிமைக்காகப் போராடிப் "பெரியாரா"க்கப் பட்டார். மூடி மறைக்காதீர்கள். உடைகளை மாற்றியதைப் போல் உள்ளங்களை மாற்றிக் கொண்டு மனிதர்களாகுங்கள். உங்களை வரவேற்போம்,மனிதர்களாக.
வேதா விற்பன்னர்கள் நிறைய பேசுகிறார்களே, இந்த சுலோகம் பற்றிச் சொல்வார்களா?
ரிக்வேதம் பிரிவு62 சுலோகம்10:-
தேவாதீனம் ஜகத்சர்வம்
மந்த்ராதீனம் துதேவதா
தன்மந்தரம் பிராமணாதீனம்
பிராமணா மம் தேவதா.
இதன் பொருள்:-
உலகம் கடவுளுக்குக் கட்டுப் பட்டது
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை
எனவே பிராமணர்களே நமது கடவுள்!
மனுஸ்மிருதி - சாதி என்ற வார்த்தை இந்த சமுதாயத்தில் வந்ததற்கு இந்நூால் தான் காரணம்... இதில் தான் கடவுள் சாதியை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது....
பார்ப்பனர்கள் தாம் தெய்வப் பிறவிகள் என்றும் மற்றவர்கள் தேவர்களின் அடியவர்களின் என்றும் அவர்கள் தான் முதன் முதலில் சாதியைக் குறிப்பிட்டு முதல் பிரிவினையை வழி வகுத்தனர்...
சூத்திரர்கள் எனப்பட்ட ஒரு பிரிவினரை கற்பித்து அவர்கள் கோயிலுக்குள் வர தடைபோட்டனர்... அதற்காக அவர்கள் வெளியிலிருந்து கடவுனை தரிசிப்பதற்காக ராஜகோபுரம் ஏற்படுத்தப்பட்டது...
சூத்திரர்கள் தவறு செய்தால் பெருங் குற்றம்.. அதே தவறை பார்ப்பனர்கள் செய்தால் அது குற்றமாகாது என்றும் அந்நூல் கூறியது..
சூத்திரர்கள் கல்வி கற்றக தடை செய்யபட்டனர். வேதம் கற்க தடைசெய்யப்பட்டனர். அவர்களது வீட்டு மனைவிமார்கள் மட்டும் கொயிலுக்கு சென்று அங்கிருக்கும் அர்ச்சக பார்ப்பனருக்கு உடற்சேவை செய்து பாவத்தை தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்...
மலத்தை தொட்டவன் அதை தொட்டதற்கு வருத்தப்பட்டு குளிப்பதில்லை.. ஆனால் ஒரு சூத்திரனை தெரியாமல் தொட்டு விட்டால் கூட அது மாபெரும் குற்றம், தீட்டு என்று கற்ப்பிக்கப்பட்டு அவர்கள் குளி்த்து விட்டு தான் வீட்டிற்குள் நுழைவர்...
இப்படியெல்லாம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் 2000 வருடஙகளாக அடிமைப்பட்டிருந்தது.. அதனை தட்டிக் கேட்டவர்கள் தெய்வக் குற்றம் என்று தண்டிக்கப்படடனர்..
சிலர் தான் அதைத் தட்டிக் கேட்டு நிலைத்து நின்றனர்.. அவர்களுள் குறி்ப்பிடப்பட்டவர்கள்... அயோத்தி தாசப் பண்டிதர், பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள்....
இது தான் ஆரிய சாதிகளின் வரலாறு...
தமிழ்ச் சாதி முறையை பார்ப்போம்..
தமிழ்ச் சாதி முறை என்பது தொழில் வகையால் பிரிக்கப்பட்டது. இதில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அனைவரும் சமம் என்று அவரவர்கள் தம் தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டதே ஒழிய பிரிப்பின்படி பிரிக்கப்படவில்லை..... தீட்டு என்று யாரும் விலக்கி வைக்கப்பட வில்லை.. அனைவரும் சம அளவில் பாவிக்கப்பட்டனர்...
இந்த ஆரியசாதி மரபு, நமது தமிழ்ச் சாதி மரபில் புகுந்ததால் ஏற்பட்ட கோளாறுகளே இன்றுள்ள சாதி வேற்றுமையுள்ள சமூகத்தின் அடித்தளம்...
மக்கள் கடவுளை ஏற்றனர்.. அதன் பிறகு கடவுளுக்காக மதத்தை ஏற்றனர். மதத்திற்காக சாதியை ஏற்றனர்.. அதனால் தான் கடவுள் நம்பிக்கை தான் சாதி வேற்றுமையின் அடி நாதம் என அதை எதிர்த்து பிரச்சாரம் செய்தார் பெரியார்... ஆனால் அவர் சாதி எதிர்ப்பாளர் என்று சொல்லப்படாமல், நாத்திகர், கடவுள் மறுப்பாளர் என்று கூறப்படுவது தான் சாதி வெறியர்களின் வெற்றி......
2000 வருடங்களாக சாதியின் பெயரால் தாழ்த்தி வைக்கப்பட்ட சமூகம்,
2000 வருடங்களாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம்,
2000 வருடங்களாக சமஉரிமையற்றவர்கள் என கூறப்பட்ட சமூகம்,
2000 வருடங்களாக அடித்தட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்த சமூகம்,
2000 வருடங்களாக கோயிலுக்கு செல்லக் கூட அனுமதி மறுக்கப்ப்ட்ட அந்த சமூகத்தை எப்படி முன்னேற்றுவது ????????????
சாதி முறை இன்று இல்லை என்று நினைப்பவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கயலார்லாஞ்சியில் நடந்த கொடுமையை நினைவு கொள்ளவும்...
சாதி முறையால் தாழ்த்தி வைக்கப்பட்ட சமூகத்திற்கு, 2000 வருடங்கள் அவர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததந்கு நிவாரணமாக எதை கொடுப்பது ???????
அது தான் இடஒதுக்கீடு..........
ஒருவன் அடிபட்டுவிட்டான் எனில் அவன் மருத்துவனிடம் அடிபட்ட இடத்தை காட்ட வேண்டும்.. பிறகு அவர் மரந்து போடுவார்...
இதே போல தான் அவர்கள் அடிபட்டது சாதியால், அதனால் தான் சாதியைக் காட்டி(Community Certificate) அதற்கு மருந்து(இட ஒதுக்கீடு) மூலம் நிவாரணம் பெறுகின்றனர்...
நாம் அனைவரும் சமம் என்று இன்று சொல்பவர்கள் நம்முடைய மூதாதையர் தவற்றுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் ????
2000 வருடங்களாக கல்வி மறுக்கப்ட்ட சமூகத்திலிருந்து தற்பொழுது தான் 200 வருடங்களாக பள்ளியை எட்டிப் பார்க்கும் சமூகத்தை சேர்ந்தவனும்,
2000 வருடங்களாக பிறரை அடிமை படுத்தி சகல செளகர்யத்துடன் அரச பதவிகளிலும் வீற்றிருக்கும் தாய், தந்தை, வீட்டில் இன்டர்நெட், கோச்சிங் சென்டர், தாயும் தந்தையும் பாடமெடுக்கக் கூடிய வசதி பெற்ற மேல் தட்டு வர்க்க மாணவனும் ஒன்றா ????????????????
இந்த இடஒதுக்கிட்டை அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக பயன்படுத்தவே சாதி இன்றும் இருப்பதாக உணர்வுகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது........
'இடஒதுக்கீடால் தகுதி திறமை இல்லாமல் போய்விடும்'
இது வரை இதற்கு எவருமே ஆதாரம் காட்டியதில்லை.. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பல வருடங்களுக்கு இருப்பதால் இங்கு தகுதியும் திறமையும் குறைந்து போய் விட்டதாக எவரேனும் கூறமுடியுமா ???
ஆசியாவிலேயே முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பலதரப்பட்ட மருத்துவ அதிசயங்களை சென்னையில் தான் நிகழ்த்தியிருக்கிறார்கள்... ஏன் வடநாட்டிலிருப்பவர்கள் சென்னைக்கு படையெடுக்கிறார்கள் ? இங்கு தான் தகுதி திறமை குறைந்திருக்குமே என்றிருக்க முடீயுமா ????
இந்தியாவில் எங்குமே இல்லாத வனையில் தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கிறது.. இது தான் வடநாட்டு பார்ப்பன இந்து 'இந்தி'ய தேசியவாதிகளின் கண்ணுக்கு உருத்தலாக இருந்துவருகிறது.. அதனை தகர்க்கவே இந்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது....
மேலும் இது குறித்த செய்திகள் ::
மனித உரிமை ஆர்வலரும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளருமான புதுச்சேரி சுகுமாரனின் இடஒதுக்கீடு தொடர்பான முந்தைய கட்டுரை
உலகநாடுகளில் இட ஒதுக்கீடு (விக்கிப்பீடியாவிலிருந்து...)
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : இங்கு 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம்.
தென்னாப்பிரிக்க குடியரசில் 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை ஆப்பிரிக்கானர் இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தியா: இந்தியாவில் மரபினால் சமூக கொடுமைகளுட்பட்ட பல சாதியினருக்கு பரவலாக ஒதுக்கீடு உள்ளது.
மலேசியாவில் : இங்கே பெரும்பான்மையினரான மலாய இனத்தினர், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிருத்த கடந்த 50 ஆண்டுகளாக ' பூமிபுத்திரர்' கொள்கையின் படி தங்களுக்கு பரவலாக இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.
இலங்கை: மொழி, மாவட்ட, இன வாரியாக இட ஒதுக்கீடு உண்டு.
பாஸ்னியா: பெண்களுக்கு போலீஸ் இலகாவில் 29% ஒதுக்கீடு.
பிரேசில்: சில பல்கலைகழகங்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், பழங்குடிகளுக்கும்
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home