<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d7374703590537237587\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://tamizhmarumalarchi.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://tamizhmarumalarchi.blogspot.com/\x26vt\x3d3097823104206445569', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

PRESS RELEASE[23.07.2011]:: “தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?” - கி.வெங்கட்ராமன் கேள்வி!

Saturday 23 July, 2011

"தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?"கி.வெங்கட்ராமன் கேள்வி

 

23.07.2011, சென்னை-17.


"தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் எரிவளி கிடைக்கும் போது, கச்சா எண்ணெய் உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், ஏசல், விலையேற்றம்?" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பினார்.

 

பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(23.07.2011) சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன், "தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்களம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் தாராளமாக பெட்ரோல் கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா விலை எண்ணைய் உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

 

அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதை போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை(ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாயநாடாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

 

இப்போது காவிரிப்படுகையை இந்திய அரசு தீருபாய் அம்பானியின் ரிலையன்சு குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 இலட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றனர். அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும் போது எத்தனை இலட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.



தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை - த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

Wednesday 20 July, 2011

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

 

சென்னை, 20.07.2011.


பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும்.

 

பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கத் தமிழக அரசுக்கு அனுமதியும் வெளிநாட்டுப் பணமும் இந்திய அரசு வழங்க வேண்டும்.

 

தமிழக அரசு இக்கோரிக்கைகளை இந்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும். பெட்ரோலியம் உற்பத்தியாகும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு அரபு நாடுகளில் இருப்பதைப் போல மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களை வழங்க வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு 23.07.2011 காரிக்(சனி)கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு த.தே..பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் த.அன்புவாணன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றுகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை- த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

 

சென்னை, 20.07.2011.


பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

 

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும்.

 

பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் வாங்கத் தமிழக அரசுக்கு அனுமதியும் வெளிநாட்டுப் பணமும் இந்திய அரசு வழங்க வேண்டும்.

 

தமிழக அரசு இக்கோரிக்கைகளை இந்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும். பெட்ரோலியம் உற்பத்தியாகும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு அரபு நாடுகளில் இருப்பதைப் போல மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களை வழங்க வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு 23.07.2011 காரிக்(சனி)கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு த.தே..பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் த.அன்புவாணன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் உலகம் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் இணையாசிரியருமான தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றுகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

PRESS RELEASE[20.07.2011]:: சமச்சீர் கல்வி: செயலலிதா முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் - பெ.மணியரசன் அறிக்கை!

சமச்சீர்க் கல்வி :   

செயலலிதாவின் மோசடி முயற்சிகளை அம்பலப்படுத்திவிட்டது உயர்நீதிமன்றம்

முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்

 

சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய பொது பாடத்திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18.7.2011 அன்று அளித்தத் தீர்ப்பு தமிழக முதலமைச்சர் செயலலிதாவின் சமச்சீர்க் கல்விக்கு எதிரான தீய நோக்கத்தையும் சட்டத்துக்குப் புறம்பான, மலிவான தந்திரங்களையும் அம்பலப்படுத்தி விட்டது.

 

வல்லுநர் குழு ஒரு மனதாக பரிந்துரை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தாக்கல் செய்த அறிக்கை போலியாகத் தயாரிக்கப்பட்டது  என்பதை சான்றுகளுடன் தோல் உரித்துக் காட்டிவிட்டது உயர் நீதிமன்றம். தமிழகக் கல்வித்துறை செயலாளர் சபீதா முதல்வரின் விருப்பத்திற்கேற்ப வல்லுநர் குழு அறிக்கையை தயாரித்திருக்கிறார். அதில் வல்லுநர்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.

 

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு எம்.ஒய் இக்பால், நீதிபதி திரு டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் வல்லுநர் குழு உறுப்பினர்களின் தனித்தனியே தெரிவித்தக் கருத்துகளை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் கூறினர். அவ்வாறு பெறப்பட்ட கருத்துகளில் ஒரு பெண் உறுப்பினர் சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும் தேவையானது என்றும் கருத்துக் கூறியுள்ளார் என்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அத்துடன் வல்லுநர் குழு உறுப்பினர்களில் இருவருக்கிடையே மின்னஞ்சலில் நடந்த கருத்து பறிமாற்றத்தில் குறிப்பாக சமூகஅறிவியல் பாடம் பற்றி பின் வருமாறு கூறியுள்ளனர். '' சமச்சீர்க் கல்வி பாடங்களில் குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவை திருத்தப்படக் கூடியவை. தி.மு.க வின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடங்கள் ஏறக்குறைய இல்லை. மாணவர்களின் மனதில் இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் அரசியலை விதைப்பது கடினம். இந்தப் பாடத்திட்டத்தைப் படிக்கும் மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று நிரூபிப்பதும் மிகக் கடினம்.'' என்று கூறியுள்ளனர். இதையும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 சமச்சீர்ப் பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வல்லுநர் குழு ஒருமித்து கருத்துரைத்தாக ஒரு போலி அறிக்கையைத் தயாரித்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அதில் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். இக்குற்றம் முதலமைச்சர் செயலலிதாவையும் கல்வித்துறை செயலாளர் சபீதாவையும் சேர்ந்ததாகும். இது ஒரு மோசடி செயலாகும். பதவியேற்கும் போது, விருப்பு வெறுப்பின்றி, பக்கச் சார்பின்றி சட்டப்படி தமது அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று செயலலிதா எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு நேர்

 

 

எதிரான செயலாகும். அவர் முதலமைச்சராகத் தொடர்வதற்கான தகுதியை இழந்துவிட்டார். கல்விதுறை செயலாளர் சபீதாவையை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

                                                                                                                                                       

2004 ஆம் ஆண்டு தயாரிக்கபட்ட பழைய பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அந்த வல்லுநர் குழு எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை. அப்படியிருக்க 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ள சமச்சீர்ப் பாடப் புத்தகங்களை புறக்கணித்துவிட்டு 2004  ஆம் ஆண்டு திட்டப்படி புதிய பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்குவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவது தவறான முயற்சி என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

'தன்னால் நேரடியாக சாதிக்க முடியாத செய்தியை சட்டத் திருத்தம் கொண்டு வந்து மறைமுகமாக சாதிக்க தமிழக அரசு முயன்றுள்ளது. ஒரு சட்டத்தில் கொண்டு வரும் திருத்தம், அந்த மூலச்சட்டத்தின் நோக்கத்தையே பாதிக்கும் வகையில் அமையக்கூடாது. அப்படி அமைந்தால் அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரண்பட்டதாகக் கருதப்படும். இந்தச் சிக்கலில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி செயல் படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிச்செல்வது உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள ஆணையை மீறும் செயலாகும். அதுமட்டுமல்ல இந்த செயல்பாடு , சமச்சீர்க் கல்விக்கான மூலச்சட்டத்தையே நீக்குவதற்கு சமமாகும்'', என்று நீதிபதிகள் தீர்ப்புரையில் கூறியுள்ளனர்.

 

உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மேற்படி கருத்துகள் முதல்வர் செயலலிதாவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியுள்ளன. சமூக சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானவர் செயலலிதா என்பது ஊரறிந்த உண்மை. இப்பொழுது சமச்சீர்க் கல்வியை நீக்குவதற்கு இவ்வளவு அப்பட்டமாக சூழ்ச்சிகள் செய்ததும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததும் அவருடைய சமூக நீதிக்கு எதிரான மன நிலைக்கு அப்பால், மெட்ரிக்குலேசன் பள்ளி முதலாளிகளுக்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

 

தமது நிலைபாட்டை நீதிமன்றத்தில் நிலை நிறுத்த நேர்மையான வழிமுறைகளைக் கையாளாமல், சூதாக சூழ்ச்சித்திட்டங்களில் இறங்கிய செயலலிதா முதல்வர் பதவிக்கே தகுதியற்றவர். உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளபடி ஒரு கோடியே முப்பதாயிரம் மாணவர்களின் படிப்போடு விளையாடிக் கொண்டிருக்கும் செயலலிதாவின் முரட்டுத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் சக்தி எழுந்து போராடுவதுதான் சரியான  தீர்வாக அமையும்.

 

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: சென்னை

நாள்: 20.7.2011

 

 

 

தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

Sunday 17 July, 2011


தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார்.

 கவிவீச்சு

சிதம்பரத்தில் நேற்று(16.07.2010)  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் "தமிழர் தொழில், வணிக, கல்வி பாதுகாப்பு மாநாடு" நடந்தது. சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்த இம்மாநாட்டிற்கு, தோழர் பெ.சவுந்திரராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர்கள் கவிபாஸ்கர், இராசா இரகுநாதன், கோ.கவித்துவன், புலவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவிவீச்சு நிகழ்த்தினர்.

மலர் அரங்கம்

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொழில், வணிகத்தை ஆக்கிரமித்துள்ள அயல் இனத்தார் குறித்த தகவல்கள் அடங்கிய மாநாட்டு மலரை குடந்தைத் தமிழ்க் கழகத்தின் செயலர் திரு. சா.பேகன் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.பு.நடராசன், பொருளியல் துறை பேராசிரியர் ஜி.இரவி, சிதம்பரம் சிறுதொழில் முனைவர் அமைப்பின் திரு. செல்வ.கதிரவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலர் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர்.

 பாராட்டு அரங்கம்

கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் சிறை சென்ற 120 த.தே.பொ.க. தோழர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, மக்கள் உரிமைப் பேரவையின் அமைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஐந்தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கோ.சேகர் பாராட்டுரை நிகழ்த்தினார்.

 தீர்மானங்கள்

மாநாட்டுத் தீர்மானங்களை குடந்தை த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.விடுதலைச்சுடர் முன்மொழிந்தார். காசுமீர், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர்கள் வீடு, நிலம், மனை வாங்கத் தடை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கப்படக் கூடாது, 51 விழுக்காட்டுப் பங்குதாரராக தமிழர்களை சேர்த்துக் கொள்ளாத வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்க்க் கூடாது, தமிழக கல்வி நிறுவனங்களில் 85 விழுக்காட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 85 விழுக்காட்டுப் பணி வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவித்து வெளிமாநில அரிசி மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சிறப்பரங்கம்

      மாநாட்டின் சிறப்பரங்கத்திற்கு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தே.அரவிந்தன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு. வெ.சேகர் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

 திரைப்பட இயக்குநர் திரு வெ.சேகர் பேசும் போது, தமிழ்த் திரைப்பட உலகில்  இன்று ஆதிக்கம் செலுத்தும் அயல் இனத்தாரின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். "ஈழத்தில் நம் இனம் செத்துக் கொண்டிருந்த போது திரை உலகின் சார்பில் இராமேசுவரத்தில் நாங்கள் கண்டனக் கூட்டம் நடத்த்த் திட்டமிட்டோம். அதற்கு, இயக்குநர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நடிகர் சங்கத்தில் மட்டும் பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர். பின்னர் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும், அதனால் வர முடியாது என்று சொல்லி விட்டனர். பின்னர் தான் தெரிந்தது, அயல் இனத்தைச் சேர்ந்த நடிகர்கள் நாங்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்காகப் பேராட வேண்டும் என்று சொல்லிவிட்டு வர மறுத்தனர். இந்தளவிற்கு நடிகர்கள் சங்கத்தில் அயல் இனத்தார் ஆக்கிரமிப்பு உள்ளது" என்று அவர் பேசினார்.

 மாநாட்டை நிறைவு செய்து பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், "தமிழ் இனம் அறிவுச் சமூகமாக திகழ்ந்து வந்த ஓர் இனம். அலெக்சாண்டருக்கு சேலத்திலிருந்து செய்யப்பட்ட வாள் தான் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் ஆய்வாளர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஓர் அறிவுச் சமூகத்தில் பிறந்த தமிழ் பொற்கொல்லர்கள் இன்று அயல் இனத்தாரின் ஆதிக்கத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நீடித்து வருகின்றது. இந்நிலையை மாற்ற, தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று பேசினார்.

 கடலூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, தஞ்சை, ஓசூர், கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். நிறைவில், தோழர் பா.பிரபாகரன் நன்றி நவின்றார்.



PRESS RELEASE[17.07.2011]:: தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

தமிழகத் தமிழர்கள் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும் - பெ.மணியரசன் பேச்சு!

 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார்.

 கவிவீச்சு

சிதம்பரத்தில் நேற்று(16.07.2010)  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் "தமிழர் தொழில், வணிக, கல்வி பாதுகாப்பு மாநாடு" நடந்தது. சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்த இம்மாநாட்டிற்கு, தோழர் பெ.சவுந்திரராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர்கள் கவிபாஸ்கர், இராசா இரகுநாதன், கோ.கவித்துவன், புலவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவிவீச்சு நிகழ்த்தினர்.

மலர் அரங்கம்

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொழில், வணிகத்தை ஆக்கிரமித்துள்ள அயல் இனத்தார் குறித்த தகவல்கள் அடங்கிய மாநாட்டு மலரை குடந்தைத் தமிழ்க் கழகத்தின் செயலர் திரு. சா.பேகன் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.பு.நடராசன், பொருளியல் துறை பேராசிரியர் ஜி.இரவி, சிதம்பரம் சிறுதொழில் முனைவர் அமைப்பின் திரு. செல்வ.கதிரவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலர் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர்.

 பாராட்டு அரங்கம்

கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் சிறை சென்ற 120 த.தே.பொ.க. தோழர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, மக்கள் உரிமைப் பேரவையின் அமைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஐந்தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கோ.சேகர் பாராட்டுரை நிகழ்த்தினார்.

 தீர்மானங்கள்

மாநாட்டுத் தீர்மானங்களை குடந்தை த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.விடுதலைச்சுடர் முன்மொழிந்தார். காசுமீர், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர்கள் வீடு, நிலம், மனை வாங்கத் தடை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கப்படக் கூடாது, 51 விழுக்காட்டுப் பங்குதாரராக தமிழர்களை சேர்த்துக் கொள்ளாத வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்க்க் கூடாது, தமிழக கல்வி நிறுவனங்களில் 85 விழுக்காட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 85 விழுக்காட்டுப் பணி வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவித்து வெளிமாநில அரிசி மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சிறப்பரங்கம்

      மாநாட்டின் சிறப்பரங்கத்திற்கு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தே.அரவிந்தன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு. வெ.சேகர் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

 திரைப்பட இயக்குநர் திரு வெ.சேகர் பேசும் போது, தமிழ்த் திரைப்பட உலகில்  இன்று ஆதிக்கம் செலுத்தும் அயல் இனத்தாரின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். "ஈழத்தில் நம் இனம் செத்துக் கொண்டிருந்த போது திரை உலகின் சார்பில் இராமேசுவரத்தில் நாங்கள் கண்டனக் கூட்டம் நடத்த்த் திட்டமிட்டோம். அதற்கு, இயக்குநர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நடிகர் சங்கத்தில் மட்டும் பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர். பின்னர் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும், அதனால் வர முடியாது என்று சொல்லி விட்டனர். பின்னர் தான் தெரிந்தது, அயல் இனத்தைச் சேர்ந்த நடிகர்கள் நாங்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்காகப் பேராட வேண்டும் என்று சொல்லிவிட்டு வர மறுத்தனர். இந்தளவிற்கு நடிகர்கள் சங்கத்தில் அயல் இனத்தார் ஆக்கிரமிப்பு உள்ளது" என்று அவர் பேசினார்.

 மாநாட்டை நிறைவு செய்து பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், "தமிழ் இனம் அறிவுச் சமூகமாக திகழ்ந்து வந்த ஓர் இனம். அலெக்சாண்டருக்கு சேலத்திலிருந்து செய்யப்பட்ட வாள் தான் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் ஆய்வாளர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஓர் அறிவுச் சமூகத்தில் பிறந்த தமிழ் பொற்கொல்லர்கள் இன்று அயல் இனத்தாரின் ஆதிக்கத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நீடித்து வருகின்றது. இந்நிலையை மாற்ற, தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று பேசினார்.

 கடலூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, தஞ்சை, ஓசூர், கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். நிறைவில், தோழர் பா.பிரபாகரன் நன்றி நவின்றார்.

 

 

::FONT PROBLEM::

Click here to
download Unicode EXE
Run this Exe for setting up UNICODE for your system.

Click here to
Download Bamini Font.
Copy the font file and paste it in the Fonts Folder of Control Panel

செய்தித் தலைப்புகள்


ஒரு குட்டி தேர்தல்


சற்றுமுன் நிகழ்ந்தவை..


தங்கள் கருத்துக்கள்

தமிழில் எழுத கீழே இங்கு தட்டச்சு செய்யவும் ! தாங்கள் எழுத விரும்பும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அப்படியே தட்டச்சு செய்யவும்...
எடுத்துக்காட்டு: 'அம்மா' என்று எழுத Ammaa என தட்டச்சு செய்யவும்
Phonetic
Tamil Typewritter

செய்தித் தொகுப்பு

தோழமைத் தளங்கள்

எம்மைப் பற்றி

மறுமலர்ச்சி லாபநோக்கமற்ற இணையதள மாத இதழ்.
Creative Commons License



This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 2.5 License

பார்வையாளர் எண்ணிக்கை
ஆசிரியர்:Unknown

தேடல்

வலைதளங்கள்
மறுமலர்ச்சி தளம்