<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d7374703590537237587\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://tamizhmarumalarchi.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://tamizhmarumalarchi.blogspot.com/\x26vt\x3d3097823104206445569', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

மூவர் மரண தண்டனையை ரத்து செய்க! - ஓசூரில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

Saturday 13 August, 2011

மூவர் மரண தண்டனையை இரத்து செய்க
ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்

ஓசூர், 13.08.2011.
 
இராசீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அநியாயமாக சிறையிலருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தமிழக அரசு, ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஓசூரில் இன்று(13.08.2011) ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்திருந்த காவல்துறையினர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பின் அனுமதியளித்தனர். இதையடுத்து ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் நடவரசன் தலைமை தாங்கினார். தமிழக இளைளுனர் ஒருங்கிணைப்பு இயக்க தோழர் பிரசாத், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செந்தமிழ், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக விசுவநாதன் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
 
நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து பேசினார். அவர் பேசும் பொது, இராசீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள இன்றும் பல விடயங்கள் மர்மமாக, விசாரக்கப்படாத நிலையில் இருக்கும் போது இப்படி அவசர அவசரமாக மரண தண்டனைக்கு உத்தரவிடுவது சரியல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். ஆர்ப்பாட்டாத்தில், பொது மக்களையும், தமிழின உணர்வாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
 
செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home

::FONT PROBLEM::

Click here to
download Unicode EXE
Run this Exe for setting up UNICODE for your system.

Click here to
Download Bamini Font.
Copy the font file and paste it in the Fonts Folder of Control Panel

செய்தித் தலைப்புகள்


ஒரு குட்டி தேர்தல்


சற்றுமுன் நிகழ்ந்தவை..


தங்கள் கருத்துக்கள்

தமிழில் எழுத கீழே இங்கு தட்டச்சு செய்யவும் ! தாங்கள் எழுத விரும்பும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அப்படியே தட்டச்சு செய்யவும்...
எடுத்துக்காட்டு: 'அம்மா' என்று எழுத Ammaa என தட்டச்சு செய்யவும்
Phonetic
Tamil Typewritter

செய்தித் தொகுப்பு

தோழமைத் தளங்கள்

எம்மைப் பற்றி

மறுமலர்ச்சி லாபநோக்கமற்ற இணையதள மாத இதழ்.
Creative Commons License



This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-Share Alike 2.5 License

பார்வையாளர் எண்ணிக்கை
ஆசிரியர்:Unknown

தேடல்

வலைதளங்கள்
மறுமலர்ச்சி தளம்